Browsing "Older Posts"

Browsing Category "வைரஸ்"
சில வைரஸ் பற்றிய தகவல்கள் :-
உலக அளவில் எது மோசமான வைரஸ் ? இந்த கேள்வி எழும் காரணம் பலவித வைரஸ்கள் இருப்பதால் தான். சில குறிப்பிட்ட கால கட்டங்களில் சில வைரஸ்கள் பிரபலம். தகுந்த மருந்துகள் கண்டுபிடித்து தடுத்து விடுகிறார்கள் சிலவற்றை மட்டுமே முழுக்க பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. சில இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில கொசுக்களைப் போல் அடிக்கும் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி மிகுதியாகி இன்னும் விரியத்துடன் தாக்குபவை. முகமூடி போட்டு கொண்டு மனிதனை உண்டு இல்லை என ஒரு கை பார்ப்பவை.
இந்த பட்டியலில் ஒரு ஐந்தை மட்டும் இறுதியில் வரிசைப்படுத்தலாம்.
HIV - ஹெச் ஐ வி (எய்ட்ஸ்)
இதற்காண உலக அளவில் இறப்புகள் அதிகம் தான் வருடத்தில் 1.8 மில்லியன் பேரின் உயிரை பறித்து வருகிறது.
பரவல் : ரத்தத்தின் மூலமாக பரவக்கூடியது. வியர்வை மூலமாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுவதில்லை. உயிரணுக்களின் மூலமாக பரவுகிறது.
தடுப்பு மருந்து [Vacsin] : இது வரை இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஸ்டேஜ் வரைக்குமான கவனிப்பு [ட்ரீட்மென்ட் ] மட்டுமே மேற்க் கொள்ளப்படுகிறது.
இன்பூளூயன்ஸா [Influenza virus]
வருடத்தின் இறப்புகள் : ஐந்து லட்சம்
பரவல் : காற்றின் மூலமாகவும், தொடுதல் மூலமாகவும் பரவக்கூடியது.
தடுப்பு மருந்து : இன்னும் முழுதாக ஆராயப்படவேண்டி உள்ளது. வருட கால கட்டத்திற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அவ்வளவே.
ரேபிஸ் [Rabies ]
வருடத்தின் இறப்புகள் : 55 ஆயிரம்.
பரவல்: நாய்கடி, வெளவாள் கடி மூலமாக பரவக்கூடியது மற்றும் சில வகைமூலமாக பரவக்கூடியது. இது விலங்கிலிருந்து.
இபோலா [ EBOLA ]
வருடத்தின் இறப்புகள் : 100 க்கு குறைவானது.
பரவல் : விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும். முக்கியமாக இறைச்சி மூலம் பரவுகிறது.
தடுப்பு மருந்து : இல்லை.
ஒரே ஒரு வைரஸ் மட்டுமே உயிரிழப்புகளில் இருந்து முழுக்க முழுக்க தடுக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். அது ;
சின்னம்மை [ Smallpox ]
வருட இறப்பு இல்லை. கிடைத்த புள்ளி விவரங்களின் படி தடுக்கப்பட்டது. அல்லது நீக்கப்பட்டது. முன்னர் இதன் வருட இறப்பு 2மில்லியன் ஆக இருந்தது.
பாதிப்பு : காற்றின் மூலமாகவும், தொடுதல் மூலமாக பரவும்.
தடுப்பு மருந்து. நிரந்திரமாக தடுக்கப்பட்டது.
உலக அளவில் வைரஸ் நோய் குறைக்கப்பட்டது என்று சொன்னால் அது இளம்பிள்ளைவாதம் [போலியோ] உயிரை எடுக்காமல் வாழ்நாள் முழுதும் முடக்கி போடும் எமகாதக வைரஸ்.

சில வைரஸ் பற்றிய தகவல்கள் :-

By Unknown → வெள்ளி, 25 ஏப்ரல், 2014
வைரஸ் காய்ச்சலுக்கு-- நிலவேம்பு பொடி

* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில்,இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
* பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது;
ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
* நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
* மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
* இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை,
மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.
* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச்
சாப்பிடுவது நல்லது.
* இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.
* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.
* மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து
சாப்பிடலாம்.
* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் சி சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.
* மழை சீசனில், கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டா லும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
* மழை சீசனில், எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு, தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.
* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம்; ஆனால், அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால், மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.
* மழை சீசனில், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.



வைரஸ் காய்ச்சலுக்கு-- நிலவேம்பு பொடி

By Unknown → வெள்ளி, 28 மார்ச், 2014