38] மெய்ஞானம் கூறும் விஞ்ஞானம்

By Unknown → வெள்ளி, 27 ஜூன், 2014
Advertise
38] மெய்ஞானம் கூறும் விஞ்ஞானம் 

அஷ்டமா சித்தி. இது உங்களில் பலர் அறிந்ததே. எட்டு சித்திக்களை போல் சித்தர்கள் எட்டு வித ஒழுக்க நெறியை பின் பற்றியவர்கள். அந்த எட்டு வித ஒழுக்கங்களை இன்று பார்ப்போம். 

இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
தியானம் - தியானம் என்பது மனதை ஒரு நிலை படுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும். 

செம்பிலிருந்து களிம்பை பிரித்து எடுக்கும் வித்தை தெரிந்த சித்தர்கள் என்ன கல்லூரி படிப்பு படித்தவர்களா. மனத்தை ஒருமுக படுத்தி, ஒழுக்கத்தை கடைபிடித்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தார்கள். உலகினில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசித்தார்கள். நாம் நல்ல உடல் வலிமையுடன், வளமையாக, செழுமையாக வாழ தேவையான அருமையான விடயங்களை போதித்தார்கள்.  இதில் நாம் ஒரு விடயத்தை நன்கு கூர்மையாக கவனிக்க வேண்டும். சித்தர்கள் தாங்கள் எதை, எதை எல்லாம் செய்தார்களோ அது அனைத்தையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. ஒரு சராசரி மனிதன், மனுசியால் அது முடியவும் முடியாது. எது நம்மை போன்ற மனிதர்கள் வாழ்க்கைக்கு தேவையோ அதையே சித்தர்கள் மனித குலத்திற்கு உபதேசித்தார்கள். அது எக்காலத்திற்கும் பொருந்துவதாகவும் இருக்கிறது. இங்கு பலர் மேற்கத்திய மோகத்தில் மூழ்கி இருக்க அங்கோ சித்தர்கள் தந்த கொடையான யோகா, தியானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது கலாச்சாரமே மேன்மையானது என்பதை பல மேற்கத்திய மக்கள் உணர ஆரம்பித்து உள்ளனர். இக்கரைக்கு, அக்கறை பச்சை.  

 உங்களில் எத்தினை பேர் யோகா, தியானம் முதலியவற்றை செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. செய்யாதவர்கள் இனி செய்யுங்கள். யோகா செய்வதால் உடல் மட்டும் அல்லாமல் மனமும் வலிமை பெறுகிறது. யோகா மட்டும் அல்லாமல் நமது உடல் உறுப்புகளுக்கு நன்கு வேலை கொடுக்கும் எந்த வேலை செய்தாலும் நமது மனம்  வளம் பெரும், நலம் பெரும்.

 அடியேன் வேதாத்திரி மஹரிஷி அவர்கள் தோற்றுவித்த வாழும் கலை மன்றத்தில் யோகா கற்று கொண்டு இருக்கிறேன். எனது ஏரியாவான நங்கநல்லூரில் உள்ள Body Graph ஜிம்மில் சில வருடங்கள் பயிற்ச்சி செய்து உள்ளேன். அதன் பின்னர் ராணுவத்தில் இருந்த என் பெரியப்பா மேஜர் லக்ஷ்மணனிடம் கராத்தே பயிற்ச்சி. அதன் பின்னர் Renshi Siva Balan இடம் மீண்டும் கராத்தே பயிற்ச்சியை தொடர்ந்தேன். இறுதியாக நேரு ஸ்டேடியத்தில் பாக்ஸிங்க்.  இதை எதர்க்கு இங்கு சொல்கிறேன் என்றால் நீங்கள் ஜிம், கராத்தே, குங்பு, குத்து சண்டை, ஏரோபிக்ஸ் என எதை கற்று கொண்டாலும் அதில் மூச்சை கட்டுப்படுத்தும் பிராணாயாம  பயிற்ச்சி பிரதானமானது.  

அகச்தியர் தந்த வர்ம கலையே அக்கு பன்ச்சர் சிகிச்சையாக சீனாவில் வளர்ந்தது. வர்ம புள்ளிகளின் மூலம் நோய்களை செரி செய்யும் தொடு வர்மம் [ அக்கு பன்ச்சர் ] சிகிச்சையை இந்த உலகிற்கு முதலில் தந்தது நமது சித்தர்கள். மூச்சு பயிற்ச்சி  மற்றும் ஆழ் நிலை தியானம். கராத்தே, குங்பு பயிற்சிகளில் மிக முக்கியமான ஒன்று. நமது களரி கலையே குங்பு கலையாக மாறியது. 

 உடற்பயிற்சியின் பலன்கள் குறித்து நாம் நாளை பார்ப்போம்.
38] மெய்ஞானம் கூறும் விஞ்ஞானம்
அஷ்டமா சித்தி. இது உங்களில் பலர் அறிந்ததே. எட்டு சித்திக்களை போல் சித்தர்கள் எட்டு வித ஒழுக்க நெறியை பின் பற்றியவர்கள். அந்த எட்டு வித ஒழுக்கங்களை இன்று பார்ப்போம்.
இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
தியானம் - தியானம் என்பது மனதை ஒரு நிலை படுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.
செம்பிலிருந்து களிம்பை பிரித்து எடுக்கும் வித்தை தெரிந்த சித்தர்கள் என்ன கல்லூரி படிப்பு படித்தவர்களா. மனத்தை ஒருமுக படுத்தி, ஒழுக்கத்தை கடைபிடித்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தார்கள். உலகினில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசித்தார்கள். நாம் நல்ல உடல் வலிமையுடன், வளமையாக, செழுமையாக வாழ தேவையான அருமையான விடயங்களை போதித்தார்கள். இதில் நாம் ஒரு விடயத்தை நன்கு கூர்மையாக கவனிக்க வேண்டும். சித்தர்கள் தாங்கள் எதை, எதை எல்லாம் செய்தார்களோ அது அனைத்தையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. ஒரு சராசரி மனிதன், மனுசியால் அது முடியவும் முடியாது. எது நம்மை போன்ற மனிதர்கள் வாழ்க்கைக்கு தேவையோ அதையே சித்தர்கள் மனித குலத்திற்கு உபதேசித்தார்கள். அது எக்காலத்திற்கும் பொருந்துவதாகவும் இருக்கிறது. இங்கு பலர் மேற்கத்திய மோகத்தில் மூழ்கி இருக்க அங்கோ சித்தர்கள் தந்த கொடையான யோகா, தியானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது கலாச்சாரமே மேன்மையானது என்பதை பல மேற்கத்திய மக்கள் உணர ஆரம்பித்து உள்ளனர். இக்கரைக்கு, அக்கறை பச்சை.
உங்களில் எத்தினை பேர் யோகா, தியானம் முதலியவற்றை செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. செய்யாதவர்கள் இனி செய்யுங்கள். யோகா செய்வதால் உடல் மட்டும் அல்லாமல் மனமும் வலிமை பெறுகிறது. யோகா மட்டும் அல்லாமல் நமது உடல் உறுப்புகளுக்கு நன்கு வேலை கொடுக்கும் எந்த வேலை செய்தாலும் நமது மனம் வளம் பெரும், நலம் பெரும்.
அடியேன் வேதாத்திரி மஹரிஷி அவர்கள் தோற்றுவித்த வாழும் கலை மன்றத்தில் யோகா கற்று கொண்டு இருக்கிறேன். எனது ஏரியாவான நங்கநல்லூரில் உள்ள Body Graph ஜிம்மில் சில வருடங்கள் பயிற்ச்சி செய்து உள்ளேன். அதன் பின்னர் ராணுவத்தில் இருந்த என் பெரியப்பா மேஜர் லக்ஷ்மணனிடம் கராத்தே பயிற்ச்சி. அதன் பின்னர் Renshi Siva Balan இடம் மீண்டும் கராத்தே பயிற்ச்சியை தொடர்ந்தேன். இறுதியாக நேரு ஸ்டேடியத்தில் பாக்ஸிங்க். இதை எதர்க்கு இங்கு சொல்கிறேன் என்றால் நீங்கள் ஜிம், கராத்தே, குங்பு, குத்து சண்டை, ஏரோபிக்ஸ் என எதை கற்று கொண்டாலும் அதில் மூச்சை கட்டுப்படுத்தும் பிராணாயாம பயிற்ச்சி பிரதானமானது.
அகச்தியர் தந்த வர்ம கலையே அக்கு பன்ச்சர் சிகிச்சையாக சீனாவில் வளர்ந்தது. வர்ம புள்ளிகளின் மூலம் நோய்களை செரி செய்யும் தொடு வர்மம் [ அக்கு பன்ச்சர் ] சிகிச்சையை இந்த உலகிற்கு முதலில் தந்தது நமது சித்தர்கள். மூச்சு பயிற்ச்சி மற்றும் ஆழ் நிலை தியானம். கராத்தே, குங்பு பயிற்சிகளில் மிக முக்கியமான ஒன்று. நமது களரி கலையே குங்பு கலையாக மாறியது.
உடற்பயிற்சியின் பலன்கள் குறித்து நாம் நாளை பார்ப்போம்.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " 38] மெய்ஞானம் கூறும் விஞ்ஞானம் "

Your Comment Has Been Published!