நெடுநேரத்திற்கு பின் தன்னுடைய விந்தணுக்களை ஒரு மனிதனால் வெளியேற்ற முடியும் போது, பாலுணர்வின் உச்சத்திற்கே அவனால் செல்ல முடிகிறது.
இவ்வாறு விந்தணுக்கள் வெளியேறுவதை
நீட்டிப்பதால் துணைவிக்கும் உறவில் நல்ல திருப்தி கிடைக்கும். எனினும்,
பெரும்பாலான ஆண்களுக்கு முன்கூட்டியே விந்தணுக்கள் வெளியேறுவதால், உச்சத்தை
முழுமையாக அடையும் முன்னரே சுகம் பெறாமல் தோல்வியடைகின்றனர். முன்கூட்டியே
விந்து வெளியேவது வயதான ஆண்களிடம் மிகவும் பரவலாக இருக்கும் பிரச்சனையாக
உள்ளது. எனினும், இளைஞர்களுக்கும் இந்த பிரச்னை உள்ளதை யாரும் மறுக்க
முடியாது.
முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு
விடுவதை அவனமானமாகவும் மற்றும் தங்களையும், துணைவியையும் திருப்திப்படுத்த
முடியவில்லை என்ற ஆதங்கத்தால் நம்பிக்கை இழக்கும் விஷயமாகவும் ஆண்கள்
கருதுகிறார்கள். இதன் காரணமாகவே, பெரும்பாலான ஆண்கள் இந்த பிரச்சனைக்கு
போதுமான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளாமல், தங்களுக்குள் புழுங்கிக்
கொள்கின்றனர். ஆனால், இந்த பிரச்சனையை மருத்துவரின் உதவியில்லாமல்
வீட்டிலேயே சரி செய்து விட முடியும் என்பது தான் இங்கே நல்ல செய்தியாக
உள்ளது. இயற்கை மூலிகைகளை அடிப்படையாக கொண்ட இந்த வழிமுறைகளை
பின்பற்றுவதால், உங்களுடைய செக்ஸ் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை
உருவாக்கிட முடியும்.
பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பிற
மருந்துகளை பயன்படுத்தும் முன்னதாக, இந்த இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி
உங்களுடைய பிறப்புறுப்புகளின் தேவைகளையும், துணைவியாரையும்
திருப்திப்படுத்துங்கள். இயற்கை வழிமுறைகள் முழுமையாக பலனளிக்க சில காலம்
எடுத்துக் கொள்ளும் என்பதால், அவசரப்படாமல் காத்திருக்க வேண்டும் என்பது
நாங்கள் கொடுக்கும் ஆலோசனையாகும். இந்த வழிமுறையால் பலன் கிடைக்கும் என்பது
மட்டும் நிச்சயம்.
பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால்
உங்களுடைய பாலுணர்வு அதிகரிப்பதுடன், முன்கூட்டியே விந்து வெளிப்படுவது
தடுக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு உறவு கொள்ள முடியும். அதற்கு ஒரு
தேக்கரண்டியில் பச்சை வெங்காயத்தின் விதைகளை எடுத்து, ஒரு டம்ளர்
தண்ணீருடன் கலந்து விடுங்கள். இதனை நன்றாக கலக்கி விட்டு, ஒவ்வொரு முறை
சாப்பிடும் முன்னர் குடியுங்கள். இதன் மூலம் உங்களுடைய சக்தி உறுதிப்படும்
மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை கட்டுப்படுத்த முடியும். வெள்ளை
வெங்காயத்திலும் கூட பாலுணர்வைத் தூண்டக் கூடிய குணங்கள் இருப்பதால்,
உங்களுடைய இனப்பெருக்க உறுப்புகள் உறுதிப்படுவதுடன், முன்கூட்டியே விந்து
வெளியேறுவதையும் தடுக்க முடியும். மேலும், வெங்காயத்தை சாதாரணமாக
சாப்பிடுவதால் அதன் பாலுணர்வு ரீதியான பலன்களை எளிதில் பெற்றிட முடியும்.
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும்
ஆயர்வேத சிகிச்சை முறையான அஸ்வகந்தா, முன்கூட்டியே விந்து வெளிப்படுதல்
உட்பட, ஆண்களிடம் உள்ள எண்ணற்ற பாலியல் பிரச்சனைகளை தீர்ப்பதாக உள்ளது.
முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை கட்டுப்படுத்தி, நீண்ட நேரத்திற்கு
செக்ஸ் அனுபவத்தை நீட்டிக்கச் செய்யும் முக்கியமான காரணியான பாலுணர்வை
அதிகரிக்கும் மூலிகையாக அஸ்வகந்தா உள்ளது. உடலுறுதியை அளிக்கக்
கூடியதாகவும் மற்றும் ஆண்மையிழப்பை குறைப்பதையும் அஸ்வகந்தா செய்கிறது.
உடலின் வெப்பத்தை அதிகரித்து, இரத்த
ஓட்டத்தை மேம்படுத்தும் செயலை இஞ்சி செய்கிறது. இஞ்சியை சாப்பிடுவதன் மூலம்
ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் விறைப்பைத் தன்மை
அதிகரிக்கும் மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்படும்.
அதற்கு அரை தேக்கரண்டியளவு இஞ்சியையும், அதே அளவுக்கு தேனையும் எடுத்துக்
கொண்டு, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ளவும். நீங்கள் படுக்கைக்கு செல்லும்
முன்னர் இதை குடித்து விட்டால், மாற்றத்தை கண்டிப்பாக உணர்வீர்கள்.
வெண்டைக்காயை அரைத்து எடுக்கப்பட்ட
பவுடருக்கு முன்கூட்டியே விந்து வெளிப்படுவதைத் தடுக்கும் குணம் உள்ளது. 10
கிராம் அளவுக்கு இந்த பவுடரை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் கலந்து
கொள்ளுங்கள். இரண்டு தேக்கரண்டிகள் சர்க்கரையை இதில் கலந்து, ஒவ்வொரு நாள்
இரவிலும் குடித்து வாருங்கள். இதனை ஒரு மாதத்திற்காவது பயன்படுத்தினால்
உங்களுடைய உடலில் ஆச்சரியப்படக் கூடிய மாற்றங்கள் ஏற்படுவதுடன்,
முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையையும் சமாளித்திட முடியும்.
முன்கூட்டியே விந்து வெளிப்படுவதையும்,
ஆண்களின் மற்ற பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியதாக பூண்டு உள்ளது. 3-4
பூண்டுகளை சாப்பிட்டால் முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையில்
பெருத்த மாற்றம் நிகழ்வதையும், நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதையும்
உணர முடியும். அதிலும் பூண்டை சுத்தமான பசு நெய்யுடன் சேர்த்து வறுத்து, ஆற
வைத்திருந்தால், அதனுடைய பாலுணர்வூட்டும் குணம் பாதுகாக்கப்படும்.
விறைப்புத் தன்மையில் ஏற்படும் பிரச்சனைகளையும், முன்கூட்டியே விந்து
வெளிப்படும் பிரச்சனை ஆகியவற்றை தீர்க்கக்கூடிய மருந்தாக பூண்டு உள்ளது.
இரண்டு கேரட்டுகளை துருவி, அதனை பாதியளவு
வேக வைக்கப்பட்ட முட்டையின் மேல் தூவி பின் அதன்மேல் ஒரு தேக்கரண்டி தேனை
ஊற்றிக் கொள்ளவும். இந்த கலவையை மூன்று மாதங்களுக்கு தினமும் சாப்பிட்டு
வரவும். மெதுவாக உங்களிடம் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள் மற்றும்
மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த மாற்றம் முழுமையாக நிகழும். மேலும்
முன்கூட்டியே விந்து வெளிப்படுவது கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன், இந்த
சிகிச்சையை நிறுத்தி விடலாம்.
தண்ணீர் விட்டான் கொடி எனப்படும்
அஸ்பாரகஸ் கொடியின் வேரைக் கொண்டும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவதைக்
கட்டுப்படுத்த முடியும். 20 கிராம் அஸ்பாரகஸ் வேரை எடுத்துக் கொள்ளுங்கள்
மற்றும் ஒரு டம்ளர் பாலுடன் வேரை சேர்த்து கொதிக்க வையுங்கள். பின் அதனை
வடிகட்டி அருந்தலாம். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால்,
முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையை முழுமையாக சரி செய்திட
முடியும்.
உங்களுடைய நிலைத்தன்மை மற்றும் விந்து
வெளிப்படுவதல் ஆகியவற்றை சில பயிற்சிகளின் மூலம் மேம்படுத்த முடியும். நமது
இடுப்பு தசைகளை உறுதிப்படுத்தி, விறைப்புத் தன்மையை தக்க வைத்துக்
கொள்ளவும் மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை கட்டுப்படுத்தவும்
கேகல் பயிற்சிகளை செய்யலாம். நீங்கள் எங்கிருந்தாலும் செய்யக்கூடிய
வகையிலான எளிதான பயிற்சியாக கேகல் பயிற்சி உள்ளது. அதற்கு படத்தில்
காட்டியவாறு, தரையில் படுத்து, இரண்டு கைகளையும் தரையில் வைத்து, கால்களை
தரையில் பதித்தவாறு தடக்கி, பின் இடுப்பை மட்டும் மேலே நோக்கி தூக்க
வேண்டும். இதன் மூலம் உங்களுடைய இடுப்பு தசைகள் உறுதியாவதுடன், விந்து
வெளிப்படும் குணத்தை கட்டுப்படுத்தவும் முடியும். இந்த பயிற்சியை தினமும்
15-20 முறை செய்து சிறந்த பலன்களை பெறுங்கள்.
இயற்கையாகவே பாலுணர்வூட்டும் உணவுகள்
உங்களுடைய பாலுணர்வை அதிகரிக்கவும், முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை
தடுக்கவும் செய்கிறது. கேரட், பெருஞ்சீரகம்/சோம்பு, செலரி, வாழைப்பழம்,
பூண்டு, வெங்காயம், இஞ்சி, கடல் சிப்பி, முள்ளங்கி ஆகியவை இயற்கையாகவே
பாலுணர்வூட்டும் உணவுகளாகும். இந்த உணவுகளை உங்களுடைய தினசரி உணவில
சேர்த்துக் கொள்வதன் மூலம் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது போன்ற,
பாலியல் தொடர்பான பிரச்சனைகளிலிலிருந்து விடுபட முடியும்.
வயதான ஆண்களிடம் முன்கூட்டியே விந்து
வெளிப்படும் பிரச்சனை அவர்களுடைய புரோஸ்டேட்டுடன் தொடர்புடையதாகும். இந்த
புரோஸ்டேட் பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் மற்றும் இது வருவதை தவிர்க்கவும்
ஆமணக்கு எண்ணெயை எடுத்து புரோஸ்டேட் சுரப்பி இருக்கும் இடத்தில் மசாஜ்
செய்ய வேண்டும். உங்களுடைய ஆசன வாய் மற்றும் டெஸ்டிகில்ஸ்களுக்கு இடையில்
இருக்கும் கழிவிட பகுதியில் ஆமணக்கு எண்ணெயை தடவுங்கள். இந்த பகுதியில்
எண்ணெயை தடவி விட்டு, வட்ட வடிவில் சிறிது சிறிதாக மசாஜ் செய்யுங்கள். இதை
செய்யும் போது, ஆசன வாய் முனையிலிருந்து, ஆணுறுப்பு வரை மெதுவாக தட்டிக்
கொடுங்கள்.
No Comment to " விந்தணுக்களை நெடுநேரத்திற்கு பின் "
Your Comment Has Been Published!