பொடுகினை அழிக்க

By Unknown → ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014
Advertise
பொடுகினை அழிக்க..... இய‌ற்கை வைத்தியம் :-
*தேங்காய் பால் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி
வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது
இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.
*பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.
* 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு படிப்படியாக நீங்கிவிடும்.
*ஆலிவ் ஆயிலில் பொடுகை நீக்கும் தன்மை உள்ளது. அதற்கு இரவில் படுக்கும் முன்பு, அந்த ஆயிலை லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். பின் அதனை காலையில் எழுந்து, ஷாம்பை போட்டு குளிக்க வேண்டும்.
*பொடுகு பிரச்சனைக்கு பூண்டு, எலுமிச்சை சிறந்த பலனைத் தரும். எலுமிச்சை ஸ்கால்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். பூண்டு ஒரு ஆன்டி-பயாடிக் மற்றும் ஸ்கால்ப்பில் பாக்டீரியா வராமல் தடுக்கும். ஆகவே அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்த பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.
* வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்காப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும்
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " பொடுகினை அழிக்க "

Your Comment Has Been Published!