
சர்க்கரையுடன் தேன் மெழுகு தடவிவர பால் பருக்கள் உதிர்ந்து விடும்.
அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர பீனிசம், தலைபாரம், தலைவலி நீங்கும்.
இயற்கை அன்னை நமக்கு அளித்த அருமருந்தாக திப்பிலி, நெல்லிக்காய், கடுக்காய், கருவபட்டை, கிராம்பு, ஜாதிக்காய், ஆடாதோடா இலை, நெருஞ்சி, தாதிரிப்பூ போன்ற பல பொருட்கள் முக்கியமாக இடம் பெறுகின்றன.
திப்பிலி இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது. திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து, ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.
ஜாதிக்காயை தேனில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் வயிற்று நோய்கள் நீங்கும். ஜாதிக்காய் விதைகளை அரைத்து தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.
தாதிரிப்பூவை தூளாக்கி நல்லெண்ணை கலந்து தேய்த்தால் தோல் நோய்கள் அண்டாது. பொடி செய்து தயிருடன் கலந்து குடித்து வந்தால் நன்கு ஜீரணம் ஆகும்.
கடுகு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டைப்புண் ஆறி விடும். தாமரைப்பூவை அரைத்து உடலில் தேய்த்து குளித்தால் படை, புள்ளிகள் நீங்கும். சருமம் ஜொலி ஜொலிக்கும்.
No Comment to " வயிற்று நோய்கள் நீங்க "
Your Comment Has Been Published!