குரு ஒரு பாத்திரத்தை

By Unknown → வியாழன், 11 செப்டம்பர், 2014
Advertise
குரு ஒரு பாத்திரத்தை மாணவர்கள் முன் வைத்தார், அதற்குள் பெரிய பெரிய கற்களை வைத்தார்,ஐந்து கற்களை வைத்ததும் பாத்திரம் நிறைந்துவிட்டது.
குரு:- பாத்திரம் நிரம்பி விட்டதா?
மாணவர்கள்:- நிரம்பிடுச்சு
குரு :-இல்லை...!!!
(என சிறு சிறு கற்களை போட்டுக் குலுக்கி பாத்திரத்தை நிரப்பினார்)
குரு:- இப்போது . . .?
மாணவர்கள்:- நிறைஞ்சிடுச்சி
குரு:- இல்லை...!!!
(அடுத்து மணலை கொட்டினார் கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் மணல் போய் நிறைந்தது)
குரு :-இப்போது . . .?
மாணவர்கள்:- முழுவதும் நிரம்பியது
குரு:- இல்லை...!!!
(அடுத்து நீரை ஊற்றினார் மணல் இழுத்துக்கொண்டது)
குரு:-இதிலிருந்து என்ன தெரிகிறது
மாணவன் :-முயற்ச்சி செய்தால் எதுவும் சாத்தியம்
குரு:-உண்மைதான்...!!! ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் பாத்திரத்தில் முதலில் மணலை கொட்டியிருந்தால் இந்த பெரிய கற்களை வைக்கமுடியாமல் போயிருக்கும்,
நீதி:...நம் மனமும் அப்படித்தான்... சின்ன சின்ன விஷயங்களை மனத்துக்குள் போட்டு வைத்திருந்தால் பெரிய விஷயங்களுக்கு இடமிருக்காது சின்ன விஷயங்களுக்கு அலட்டுபவர்களால் பெரிய காரியங்களை செய்ய இயலாது.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " குரு ஒரு பாத்திரத்தை "

Your Comment Has Been Published!