கருத்தரித்த பெண்களுக்கு

By Unknown → வியாழன், 9 அக்டோபர், 2014
Advertise
கருத்தரித்த பெண்களுக்கு
கொத்தமல்லி கீரையை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டால் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துகளை விட அதிக சத்துகளை இதிலிருந்து பெறலாம்.
கொத்தமல்லி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதனால் தாது விருத்தியாகி மகப்பேறுக்கு வழிவகுக்கும்.
கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
குழந்தையின் எலும்புகளும், பற்களும் உறுதியடைவதோடு தோல் சம்பந்தமான நோய்களும் தாக்காது.
இரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி பின்பு வதக்கி 200 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் நேரத்தில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் கர்ப்பவதியின் வயிற்றுவலி குறையும்.
முருங்கை இலை, கொத்தமல்லி ஆகியவற்றை சோத்து வேகவைத்து அந்த நீரை குடித்து வந்தால் பேறு கால சமயங்களில் ஏற்படும் வலி குறையும்.
கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் சீறுநீர் ந‌ன்றாக‌ பிரியும்.
வெள்ளைப் பூண்டை எடுத்து நன்றாக தட்டி, மஞ்சள் துண்டை எடுத்து அதையும் நன்றாக தட்டி அத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வற்ற வைத்து அடிக்கடி சிறுக சிறுக குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை புரட்டல், ஆராட்டம், தாகம் ஆகியவை குறையும்.
ஆடாதோடை இலை, வேர் வகைக்கு அரைக் கைப்பிடி அளவு எடுத்து நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " கருத்தரித்த பெண்களுக்கு "

Your Comment Has Been Published!