பழங்கள் சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கும்

By Unknown → திங்கள், 22 டிசம்பர், 2014
Advertise

விதம் விதமான உணவுகளையும் அதன் மருத்துவ குணங்களையும் நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறோம். அந்த உணவு தயார் செய்யப்படும் விதத்தில் அதன் மருத்துவத் தன்மை பறிபோகிறது. உதாரணமாக இரசாயன உரம் போட்டு தயார் செய்யப்பட்ட ஒரு பழத்தில் மருத்துவத் தன்மையை விட நோய்க்கூறை ஏற்படுத்தும் தன்மையே அதிகம். பொதுவாக இந்தப் பழம் இந்த நோயைப் போக்கும் என்று கூறுவது இரசாயன விளை பொருட்களை விற்பதற்கு கம்பெனிகள் செய்யும் உத்திகளில் ஒன்று.

அப்புறம் இப்படி இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் பழங்களில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற நம் கல்லீரல் இடைவிடாது வேலை செய்ய வேண்டியிருக்கும். அத்ற்கான ஓய்வை, இரவுத் தூக்கத்தை நாம் வழங்காவிட்டால் எவ்வளவு நல்ல உணவுகள் சாப்பிட்டாலும் உடல் எடுத்துக் கொள்ளாது.

உணவுகளில் மட்டும் மருத்துவக் குணம் இருந்தால் போதாது. அதைச் செரித்து உடலிற்குப் பயன்படும் வண்ணம் மாற்றுவதற்கு உள்ளுறுப்புகள் தயாராக வேண்டும். அதற்கு பசித்துப் புசிக்கும் பழக்கமும், இரவு விழிக்காமல் தேவையான தூக்கத்தைக் கொடுக்கும் பழக்கமும் அவசியம். இயல்பாக வளரும் மூலிகைகளில் உள்ள மருத்துவக் குணத்திற்கும், நாம் பயிரிட்டு வளர்க்கும் மூலிகைகளின் குணத்திற்கும் வேறுபாடு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " பழங்கள் சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கும் "

Your Comment Has Been Published!