ஆலும் வேலும் பல்லுக்குறுதி.. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி.... என்று கிட்டத்தட்ட அனைவருமே படித்திருப்போம்...
அதாவது ஆலமர குச்சி மற்றும் வேலமர குச்சிகளால் பல் தேய்க்கும் போது பல் உறுதியாக இருக்கும் என்பது இதன் பொருள்.. (நான்கு வரிகளை உடைய "நாலடியார் மற்றும் இரண்டு வரிகளை உடைய திருக்குறள் ஆகியவற்றை கசடற கற்றவர்களால்உறுதியான விவாதங்களை மேற்கொள்ள முடியும் என்பது அந்த பழமொழியின் இரண்டாம் பாக விளக்கம்)
அதே போல "பல்லு போனா சொல்லு போச்சு" என்ற கிராம சொல்வழக்கும் உள்ளது...
பற்களை தூய்மையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் தெளிவான பேச்சையும் பெறலாம்...
நமக்கு தெரிந்த ஆலங்குச்சி மற்றும் வேலங்குச்சி மட்டுமல்லாமல்... பல்வேறு மூலிகை குச்சிகளை கொண்டும் பல் துலக்கலாம்... எந்தெந்த குச்சிகளை கொண்டு பல்துலக்கினால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதையும் தெரிந்துகொள்வோம்...
எருக்கு, நாயுருவி, கருங்காலி, புங்கு, சம்பகம், ஆலகுச்சி, மருது, புரசு, இத்தி, மல்லி, நரிமா, நாவல், மா, அசோகம், அத்தி, வேம்பு, அரசு, கருவேல், ஸரள தேவதாரு, குங்கிலியமரம், மாதுளை, அடைப்பை, அரளி, வாகை, அழிஞ்சில், வேங்கை, இலுப்பை, மூவிலை, இலந்தை, ஆடுதொடா இவற்றை கொண்டு பல் துலக்கி ஈறுகளையும், பற்களையும் பாதுக்காக்கலாம்.
எருக்கு – பல்வலி அகற்றும்.
நாயுருவி – பற்களை நன்கு வளர செய்யும்.
கருங்காலி – பல்வியாதிகளை அகற்றும்.
புங்கு, சம்பகம் – வாய் நாற்றம் அகற்றும்.
ஆலகுச்சி – வாய்ப்புண்களை அகற்றி பற்களை கெட்டிப்படுத்தும்.
மருது – பற்களை சுத்தி செய்யும்.
புரசு – வாயை சுத்தி செய்யும்.
வேம்பு – ருசியளிக்கும்.
அரசு – பல் கூச்சம் நீங்கும்.
கருவேல் – பற்களை பளிச்சென்று ஆகும்.
ஸரள தேவதாரு – பற்களை கெட்டிப்படுத்தும்.
அதாவது ஆலமர குச்சி மற்றும் வேலமர குச்சிகளால் பல் தேய்க்கும் போது பல் உறுதியாக இருக்கும் என்பது இதன் பொருள்.. (நான்கு வரிகளை உடைய "நாலடியார் மற்றும் இரண்டு வரிகளை உடைய திருக்குறள் ஆகியவற்றை கசடற கற்றவர்களால்உறுதியான விவாதங்களை மேற்கொள்ள முடியும் என்பது அந்த பழமொழியின் இரண்டாம் பாக விளக்கம்)
அதே போல "பல்லு போனா சொல்லு போச்சு" என்ற கிராம சொல்வழக்கும் உள்ளது...
பற்களை தூய்மையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் தெளிவான பேச்சையும் பெறலாம்...
நமக்கு தெரிந்த ஆலங்குச்சி மற்றும் வேலங்குச்சி மட்டுமல்லாமல்... பல்வேறு மூலிகை குச்சிகளை கொண்டும் பல் துலக்கலாம்... எந்தெந்த குச்சிகளை கொண்டு பல்துலக்கினால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதையும் தெரிந்துகொள்வோம்...
எருக்கு, நாயுருவி, கருங்காலி, புங்கு, சம்பகம், ஆலகுச்சி, மருது, புரசு, இத்தி, மல்லி, நரிமா, நாவல், மா, அசோகம், அத்தி, வேம்பு, அரசு, கருவேல், ஸரள தேவதாரு, குங்கிலியமரம், மாதுளை, அடைப்பை, அரளி, வாகை, அழிஞ்சில், வேங்கை, இலுப்பை, மூவிலை, இலந்தை, ஆடுதொடா இவற்றை கொண்டு பல் துலக்கி ஈறுகளையும், பற்களையும் பாதுக்காக்கலாம்.
எருக்கு – பல்வலி அகற்றும்.
நாயுருவி – பற்களை நன்கு வளர செய்யும்.
கருங்காலி – பல்வியாதிகளை அகற்றும்.
புங்கு, சம்பகம் – வாய் நாற்றம் அகற்றும்.
ஆலகுச்சி – வாய்ப்புண்களை அகற்றி பற்களை கெட்டிப்படுத்தும்.
மருது – பற்களை சுத்தி செய்யும்.
புரசு – வாயை சுத்தி செய்யும்.
வேம்பு – ருசியளிக்கும்.
அரசு – பல் கூச்சம் நீங்கும்.
கருவேல் – பற்களை பளிச்சென்று ஆகும்.
ஸரள தேவதாரு – பற்களை கெட்டிப்படுத்தும்.

No Comment to " பல் தேய்க்கும் குச்சிகளும் அதன் பயன்களும் "
Your Comment Has Been Published!