பல்வகைப் பயிர் வளர்ப்பு

By Unknown → வெள்ளி, 26 ஜூன், 2015
Advertise

இயற்கையான முறையில் ஊட்டங்களை நிறைவு செய்வதற்கான முதல்படி பல்வகை பயிர்வளர்ப்பாகும். அதன்படி நிலத்தை 200 நாட்களில் வளம் ஏற்றிவிட முடியும். வேதி உப்புக்களால் வளமிழந்த நிலத்தையும் வளமூட்ட முடியும்
தவசம் (தானியம்) வகையில் ஏதாவதுநான்கு
எ.கா.
சோளம் - 1 கிலோ
கம்பு - ½ கிலோ
தினை - ¼ கிலோ
சாமை - ¼ கிலோ,
பயறுகள் (பருப்புகள்) வகையில் ஏதாவது நான்கு
உளுந்து - 1 கிலோ
பாசிப்பயறு - 1 கிலோ
தட்டைப்பயறு - 1 கிலோ
கொண்டக்கடலை - 1 கிலோ
எண்ணெய்வித்துகள் வகையில் ஏதாவது நான்கு
எள் - ½ கிலோ
நிலக்கடலை - 2 கிலோ
சூரியகாந்தி - 2 கிலோ
ஆமணக்கு - 2 கிலோ
பசுந்தாள் பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு
தக்கைப் பூண்டு - 2 கிலோ
சணப்பு - 2 கிலோ
நரிப்பயறு - ½ கிலோ
கொள்ளு - 1 கிலோ
மணப்பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு
கடுகு - ½ கிலோ
வெந்தயம் - ¼ கிலோ
சீரகம் - ¼ கிலோ
கொத்தமல்லி - 1 கிலோ
மேலேகூறிய ஐந்து பயிர்களையும் வளர்த்து 50-60 ஆம் நாளில் மடக்கி உழுதால் அதில் கிடைக்கும் ஊட்டங்கள் சமச் சீரானதாகவும் நுண்ணூட்டக் குறைபாடு இல்லாதவாறும் இருக்கும். ஒரு ஏக்கருக்கு இது போதும் இருநூறு நாட்களில் நிலம் வளமேறிவிடும். இம்முறையை தபோல்கர் என்ற மராட்டிய அறிஞர் சிறப்பாகச் செய்து காட்டினார். இதன் மூலம் மண்ணில் இருந்து எடுப்பதை மண்ணிற்கே பலமடங்காக்கி உயிர்க்கூளமாகக் கொடுக்கிறோம்.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " பல்வகைப் பயிர் வளர்ப்பு "

Your Comment Has Been Published!