படர்தாமரைபடர்தாமரைக்கான சில எளிய கை வைத்தியங்கள்
உங்கள் சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக ஏதேனும் இருந்தால், அது தான் படர்தாமரை. இந்த படர்தாமரையானது பூஞ்சையினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த படர்தாமரை சருமம், நகம், தலை, உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும். இந்த நிலை முற்றினால், அது கடுமையான அரிப்புகளை ஏற்படுத்தும்.
மேலும் படர்தாமரை பரவக்கூடிய ஒன்று. அதிலும் சருமத்துடன் தொடர்பு கொண்டாலோ அல்லது அவர்கள் பயன்படுத்திய துணியை பயன்படுத்தினாலோ, இது பரவும். இது சருமத்தில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைப் போன்றது அல்ல. எனவே படர்தாமரை உங்களுக்கு இருந்தால், அதனைப் போக்க உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்காக பல க்ரீம்கள், ஆயின்மெண்ட் போன்றவை கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இயற்கை மருத்துவத்தைப் போல் எதுவும் பலன் தருவதில்லை.
முக்கியமாக இந்த பிரச்சனை பெரியோர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஏற்படும். எனவே குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
பூண்டு
பூண்டுகளில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களினால், இதன் நன்மைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் படர்தாமரையை நீக்க, பூண்டு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பூண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வர வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இதனைக் கொண்டு பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அதிலும் படர்தாமரை இருந்தால், அவ்விடத்தில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி வர, படர்தாமரை நீங்குவதோடு, அது பரவுவதும் தடுக்கப்படும்.
ஆப்பிள் சீடர் வினிகர் apple cider vinegar
ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. இதனால் இவற்றைக் கொண்டு படர்தாமரைக்கு விரைவில் நிவாரணம் காணலாம்.
சூடம்/கற்பூரம்
படர்தாமரைக்கு நல்ல தீர்வை கற்பூரமும் வழங்கும். ஏனெனில் கற்பூரத்திலும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது.
கடுகு எண்ணெய்
கடுகு அல்லது அதன் எண்ணெயை தினமும் படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், படர்தாமரை மறையும்.
உப்பு மற்றும் வினிகர்
உப்பை வினிகருடன் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், நாளடைவில் படர்தாமரை மறைவதைக் காணலாம்.
ஆலிவ் எண்ணெய்
ஆவில் எண்ணெயை படர்தாமரையின் மீது தடவி வர, விரைவில் அது போய்விடும்.
மஞ்சள் தூள்
மஞ்சள் தூளின் மகிமையினால், பக்டீரியாக்கள் மட்டுமின்றி, பூஞ்சையின் தாக்குதல்களையும் தடுக்கலாம். அதிலும் இதனை படர்தாமரை உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், படர்தாமரை நீங்கும்.
பப்பாளி
பப்பாளியில் உள்ள பூஞ்சை காளான் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பக்டீரியல் தன்மை, சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும். அதிலும் பச்சை பப்பாளியை பசைபோல் அரைத்து, சருமத்தில் தடவி வர வேண்டும்.
படர்தாமரை
தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.
இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.
தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது.
படர்தாமரை பிரச்சினைக்கு தேரையர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். தேரையர் வாகடம் என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப்பட்டது.
கொன்றைக் கொழுந்து தகரைவிதை குழலா வரைவேர் குளவிந்தம்
மனறத் துளசி திரிபலையும் மற்று மிலுப்பைப் புண்ணாக்கும்
ஒன்றக் கூட்டிப் பழமோரில் ஊறி யெடுத்தெலு மிச்சம்சாற்றில்
நன்றா யரைத்துப் பூசியிட நாடா படர்தா மரைதானே.– தேரையர்.
கொன்றைக் கொழுந்து, தகரவிதை, ஆவாரைவேர், மஞ்சள், துளசி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி முள்ளி, இலுப்பைப் பிண்ணாக்கு, ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றை பழைய மோரில் ஊறவைத்து எடுத்து,எலுமிச்சைச் சாற்றுவிட்டு நன்கு அரைத்துப் படர்தாமரை இருக்கும் பகுதிகளில் பூசிவர குணமாகும் என்கிறார்.
மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.
உங்கள் சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக ஏதேனும் இருந்தால், அது தான் படர்தாமரை. இந்த படர்தாமரையானது பூஞ்சையினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த படர்தாமரை சருமம், நகம், தலை, உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும். இந்த நிலை முற்றினால், அது கடுமையான அரிப்புகளை ஏற்படுத்தும்.
மேலும் படர்தாமரை பரவக்கூடிய ஒன்று. அதிலும் சருமத்துடன் தொடர்பு கொண்டாலோ அல்லது அவர்கள் பயன்படுத்திய துணியை பயன்படுத்தினாலோ, இது பரவும். இது சருமத்தில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைப் போன்றது அல்ல. எனவே படர்தாமரை உங்களுக்கு இருந்தால், அதனைப் போக்க உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்காக பல க்ரீம்கள், ஆயின்மெண்ட் போன்றவை கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இயற்கை மருத்துவத்தைப் போல் எதுவும் பலன் தருவதில்லை.
முக்கியமாக இந்த பிரச்சனை பெரியோர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஏற்படும். எனவே குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
பூண்டு
பூண்டுகளில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களினால், இதன் நன்மைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் படர்தாமரையை நீக்க, பூண்டு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பூண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வர வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இதனைக் கொண்டு பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அதிலும் படர்தாமரை இருந்தால், அவ்விடத்தில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி வர, படர்தாமரை நீங்குவதோடு, அது பரவுவதும் தடுக்கப்படும்.
ஆப்பிள் சீடர் வினிகர் apple cider vinegar
ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. இதனால் இவற்றைக் கொண்டு படர்தாமரைக்கு விரைவில் நிவாரணம் காணலாம்.
சூடம்/கற்பூரம்
படர்தாமரைக்கு நல்ல தீர்வை கற்பூரமும் வழங்கும். ஏனெனில் கற்பூரத்திலும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது.
கடுகு எண்ணெய்
கடுகு அல்லது அதன் எண்ணெயை தினமும் படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், படர்தாமரை மறையும்.
உப்பு மற்றும் வினிகர்
உப்பை வினிகருடன் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், நாளடைவில் படர்தாமரை மறைவதைக் காணலாம்.
ஆலிவ் எண்ணெய்
ஆவில் எண்ணெயை படர்தாமரையின் மீது தடவி வர, விரைவில் அது போய்விடும்.
மஞ்சள் தூள்
மஞ்சள் தூளின் மகிமையினால், பக்டீரியாக்கள் மட்டுமின்றி, பூஞ்சையின் தாக்குதல்களையும் தடுக்கலாம். அதிலும் இதனை படர்தாமரை உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், படர்தாமரை நீங்கும்.
பப்பாளி
பப்பாளியில் உள்ள பூஞ்சை காளான் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பக்டீரியல் தன்மை, சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும். அதிலும் பச்சை பப்பாளியை பசைபோல் அரைத்து, சருமத்தில் தடவி வர வேண்டும்.
படர்தாமரை
தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.
இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.
தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது.
படர்தாமரை பிரச்சினைக்கு தேரையர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். தேரையர் வாகடம் என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப்பட்டது.
கொன்றைக் கொழுந்து தகரைவிதை குழலா வரைவேர் குளவிந்தம்
மனறத் துளசி திரிபலையும் மற்று மிலுப்பைப் புண்ணாக்கும்
ஒன்றக் கூட்டிப் பழமோரில் ஊறி யெடுத்தெலு மிச்சம்சாற்றில்
நன்றா யரைத்துப் பூசியிட நாடா படர்தா மரைதானே.– தேரையர்.
கொன்றைக் கொழுந்து, தகரவிதை, ஆவாரைவேர், மஞ்சள், துளசி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி முள்ளி, இலுப்பைப் பிண்ணாக்கு, ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றை பழைய மோரில் ஊறவைத்து எடுத்து,எலுமிச்சைச் சாற்றுவிட்டு நன்கு அரைத்துப் படர்தாமரை இருக்கும் பகுதிகளில் பூசிவர குணமாகும் என்கிறார்.
மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.
படர்தாமரை
By Unknown →
வெள்ளி, 26 ஜூன், 2015