தேயிலை மூலம் சருமத்தை பாதுக்காக்கலாம்

By Unknown → புதன், 15 ஜனவரி, 2014
Advertise
தேயிலை மூலம் சருமத்தை பாதுக்காக்கலாம்

தோல் மற்றும் கூந்தலுக்கு தேவையான சத்துக்கள் தேயிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேனீர் கூந்தளையும் தோளையும் மிருதுவாக இருக்க வழி செய்கின்றது. இந்த டீயை கொண்டு கண்களுக்கு கீழ் காணப்படும் கருவளையத்தை போக்கலாம் கால்களையும் மிருதுவாக்கலாம். சருமம் வரண்டு காணப்பட்டால் அதை சரிசெய்ய வேண்டும். அதற்கு வறண்ட சருமத்தின் மீது சிறிது சில்லென்ற கிரீன் டீயை தெளிக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்கு போவதுடன் சருமத்திற்கு தேவையான பளப்பளப்பையும் கொடுக்கும்.

கண்களுக்கு கீழ் வீக்கம் இருந்தால் அதை சரிசெய்ய வேண்டும். அதற்கு வீட்டில் டீ பையை தூக்கி எரிய வேண்டாம். அதை அப்படியே கண்களுக்கு கீழ் வைத்தால் போதும் கருவளையம் நீங்கிவிடும். ஏனெனில் டீயில் உள்ள காப்ஃபைன், கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தையும் கருவளையத்தையும் போக்கி விடும். ப்ளாக் டீ அல்லது கிரின் டீயை கொண்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் தன்மை மிருதுவாகவும் சுத்தமாகவும் மாறும். அதிலும் ஷாம்பு போட்டு குளித்தவுடன் இந்த முறையை செய்து கண்டிஷன் செய்தால் மிருதுவாக இருக்கும்.

காலில் இருந்து வரும் ஒரு வித நாற்றம் உங்கள் நம்பிக்கையை கெடுத்து விடும். காண்பவர்கள் முகம் சுளிக்க நேரிடும். இதற்கு தீர்வு கொதிக்க வைத்த டீ டிக்காஷனில் காலை ஊரவைப்பதுதான். இதனால் கால் மிருதுவாவதுடன் நாற்றம் இல்லாமலும் இருக்கும். கால்களின் வெடிப்புகளும் இதனால் மூடிவிடும். ஷேவ் செய்த பின் சருமம் வரண்டும் எரிச்சலோடும் காணப்படும். அப்பொழுது டீ டிக்காஷனை எடுத்து தடவி ஊர வைத்தால் போதும் தோல் மென்மையாக மாறும்.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " தேயிலை மூலம் சருமத்தை பாதுக்காக்கலாம் "

Your Comment Has Been Published!