கட்டுப்படும் சர்க்கரை நோய்:
- ஆலம்பட்டையை இடித்து சாறு பிழிந்து 10 பங்கு நீர் சேர்த்து குடித்துவர நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) கட்டுப்படும்.
- ஆல மொக்கினை மென்று, பல் வலி உள்ள இடத்தில் வைக்க பல் வலி, ஈறில் இருந்து ரத்தம் கசிதல் போன்றவை குணமாகும்.
- பழுத்த ஆலம் இலையை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் குழைத்து, பாதிப்பு பகுதியில் பூசி வர கரப்பான், சொறி, சிரங்கு போன்றவை தீரும்.
- ஆலம் பாலில் அருகம்புல் சூரணம் (பொடி) சேர்த்து உட்கொண்டு வர வெண்குஷ்டம், உடல் ஊதல் மற்றும் வெளுத்தல் போன்றவை குணமாகும்.
- ஆலமரத்தின் பட்டையை குடிநீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், ஈறுப்புண், வாய்நாற்றம் போன்றவை நீங்கும்.
ஆண்மை அதிகரிக்க:
- ஆலமரத்தின் மொக்கு, தளிர் இலை, விழுது, விதை இவற்றில் ஏதேனும் ஒன்றை அரைத்து, அதை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும். இதனையே பெண்கள் உட்கொண்டு வர அவர்களது மலட்டுத்தன்மையும் நீங்கும்.
- ஆலம் விழுதை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவர முடி நன்கு வளரும்.
- ஆலம் விழுது, செம்பருத்திப்பூ இரண்டையும் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி கூந்தலில் தடவிவர கூந்தல் நன்கு கருப்பாகும்.
- பித்த வெடிப்புகள் மீது ஆலம்விழுதை அரைத்தோ அல்லது ஆலம்பாலையோ பூசி வர அது குணமாகும்.
- ஆலமரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து, சிறிதளவு எருமைத் தயிரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் ஆகியவை குணமாகும்.
குணமாகும் மூலம்:
- ஆல மொக்கு, விழுது இவற்றை அரைத்து, அதில் 10 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வர மூலம், ரத்த மூலம் குணமாகும்.
- ஆலம் விதையை அரைத்து பாலில் கலந்து இரவில் குடித்து வர மலச்சிக்கல், மூல நோய் தீரும்.
- ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து பூசி வர அக்கி குணமாகும்.
- ஆலம்பட்டையை நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதை கொண்டு புண்கள், ஆறாத புண்களை கழுவ அதி விரைவில் குணமாகும்.
- ஆலமரத்தின் இலையை வதக்கி கட்டிகளுக்கு வைத்து கட்ட, கட்டி உடைந்து சீழ் வெளியாகும்.
- ஆலம் விதை, அரசு விதை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து பாலில் கலந்த குடிக்க ரத்த வாந்தி குணமாகும்.
ஆலமரத்தின் அனைத்து பாகங்களும் மேகம், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணமாக்கி உடலுக்கு வலிமையை தரக்கூடியவை.
No Comment to " உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்! "
Your Comment Has Been Published!