காசி நாதம்

By Unknown → திங்கள், 6 அக்டோபர், 2014
Advertise
காசி நாதம்"
”காசம்” என்றால் ஒளி. பிரகாசம் என்றால் மங்காத ஒளி என்பது பொருள். அதுபோல ”காசி” என்பதற்கு ஒளி, மங்காத ஞானம் என்பது பொருள். காசி நாதம் என்றால் ஒளி மங்காத ஞானத்தில் இருந்து உருவான அற்புத ஓசை என்ற பொருள். இந்த நாதத்தை நன்கு உணர்ந்து கொண்டவன் மகுடி முன் மது உண்ட நாகத்தை போல் தன்வயப்பட்டு ஆடிக் களித்திடுவான்.
காசியில் கங்கையின் வடக்கே அருணை நதி கலக்கிறது. தெற்கே அஸி நதி கலக்கிறது. இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவில் உள்ள நகரம் தான் வாரணாசி என்று அழைக்கப்படுகிறது. திருவேணி சங்கமம் (மூன்று ஆறுகள் கூடும் இடம்) இங்கே இயற்கை அன்னையிடம் இருந்து உருவாகிய நதிகளின் கலவையின் சப்த ஒலிகள்! தெய்வீக காசிநாதம் எழுப்புகின்றன.
காசிக்கு நான் இன்னும் சென்றது கிடையாது! அனால் காசிநாதத்தை நன்கு கேட்டு உணர்கிறேன். உடலெனும் இந்த மேனியில் ஓடுகின்ற நாடிகளில் கங்கை நதியை போல், ஓடுகின்ற சுழுமுனையில்! இடகலையையும் பிங்கலையையும் வந்து கலந்திடும் போது திருவேணி சங்கமம் ஏற்ப்பட்டு காசிநாதம் நன்கு எழும்புகிறது. கற்பகம்பளுடன் கலந்து ஞானதீபம் மிளிர்கின்றது. -ஸ்ரீ சூர்ய நாராயணன்
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " காசி நாதம் "

Your Comment Has Been Published!