வெந்தயத்தை

By Unknown → செவ்வாய், 7 அக்டோபர், 2014
Advertise
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை முதலியவைகள் போகும்.
வெந்தயம் 17கி எடுத்து 340கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட இரத்தம் பெருகும்.
கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.
நீர் வேட்கை, இளைப்புநோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும்.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.
மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்புசேர்த்து சுண்ட காய்ச்சி இறக்கிய சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.
இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை, நெய், பால் சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும் வலிமை உண்டாகும். இடுப்பு வலி தீரும்.
வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து சாப்பிட மார்புவலி, இருமல், மூலம் இவைகளைப் போக்கும்.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " வெந்தயத்தை "

Your Comment Has Been Published!